Thursday, 12 June 2025

THIRUKKURAL AMUTHAM

தினமும் ஒரு குறள் எனற தலைப்பில் திருக்குறள் எழுதி வருகிறேன். 16/1/2018ம் தேதி முதல். 


 குறள் 1


அகர முதல எழுத்தெல்லாம்;ஆதி
பகவன் முதற்றே உலகு.

விளக்கம்: எழத்துகளெல்லாம் 'அ' எழுத்தை தமக்கு முதலெழுத்தாகக் கொண்டுள்ளன அதுபோல உலகத்து உயிர்கள் கடவுளைத் தமக்கு முதலாகக் கொண்டுள்ளன.   MSK வின் விளக்கம்:-      ஆதி என்றால் சூரியன். சூரிய ஒளி இல்லை என்றால் உலகம் முழுவதும் இருளாக இருக்கும். எனவே ஆதி யை பகவான் என்றார். அகரம் எழுத்துகளின் முதல் எழுத்து. உலகத்தில் இந்த இரண்டும் கண்களை போன்றது.  நமது இரண்டு  கண்களையும் மூடிபார்த்தால் ஒன்றும் தெரியாது  ஆனால்   அறிவு என்ற அகக்  கண்களையும் திறந்து பார்த்தால் ஞானம் கிடைக்கும் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்
[ உயிர்கள் வாழ சூரிய ஒளி தேவை ஒளி இல்லை என்றால் உயிர்கள் வாழ முடியாது.  மரம் செடி முதல் அழியும்.  உலகம் முழுவதும் இருளாக இருக்கும். அ எழுத்து மூலம் மணிதன் எழுத்து அறிவு பெற்றான். எனவே இவை இரண்டும் உலகம் முழுக்க தேவை உலகம் முழுக்க அறிவு ஜீவிகள் ஆக முடியும்
[0 இடைகாலத்தில் வந்தவர்கள் ஆரியர்கள்  திருவள்ளுவரை ஆதி என்ற புலய பெண்ணிற்கும் பகவன் என்ற அந்தணர்க்கும் பிறந்தவர் என்று புணையப்பட்ட கதை தான்.  அவரை தாழ்த்தி காட்ட. இது என் தனிப்பட்ட கருத்து எனக்குள் தோன்றிய எண்ணம்.  வாழ்க வள்ளுவம் வளர்க பகுத்தறிவு சிந்தனை இங்கணம் MSK நாயனார் கோவை

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

விளக்கம்:-
ஒருவர் கற்ற கல்வியின்  ஞானத்தை., கலையை, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் to share your knowledge to others. இல்லை என்றால் அவன் கற்றுக் கொண்ட கல்வியால் பயன் இல்லை.  கற்ற கல்வியின் மூலம் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும். அதுமட்டுமல்லாமல் கற்றுக் கொண்ட நெறியை உருவாக்குவது அதை எல்லோரும்  பின்பற்றி நடக்க அறிவுறுத்த  வேண்டும்.  அதுமட்டுமல்லாமல்  இறைவனுடைய The Creator ரையும்  நிணைத்து அடிகளைத் தொழுதல் வேண்டும். வணக்கம் MSK  நாயனார்

குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.       
MSK விளக்கம்;-  இந்த பூமியில் உள்ள மணிதர்கள் பிறக்கும் போது குழந்தை யாக இருக்கும் போது ""குழந்தையும் தெய்வமும்  குணத்தால் ஒன்று "" அதாவது கடவுள் படைக்கும் போது  மணிதனை  மலர் போன்ற மென்மையான மணதுடன் படைத்தான். ( ஏகினான்) அதன் பிறகு அவன் செய்த கர்ம வினை தான் ஆட்டுவிக்கிறது எனவே இறைவன் Creator அடியை (மாணடி) நிணைப்பவர்கள் தொழுபவர்கள்  ( நிலமிசை) இந்த பூமியில் நீண்ட காலம் வாழ்வர். உ.ம். போகர் போன்ற சித்தர்கள்

 குறள் 4:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

MSK:- இவ்வுலகில் வாழ ஒவ்வொரு மனிதனும் மண்/பொன்/பெண் ஆசை மற்றும்  பொருள்/ பணத்தை சம்பாதிக்க வேண்டும் ஆனால் அதற்கு ஒரு எல்லை இல்லை. ஆசை மற்றும்  பணம் மனிதனுடைய வேண்டுதல்.  பணம்  மற்ற பொருள்களை  பற்றி ஆசைப்படாமல் அவைகளை வேண்டாமல் ""போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து "" என்று  இருப்பவர்கள் இறைவன்( Creator) அடியை நினைத்து மனதை ஒருநிலை படுத்தி  வழிபாடு செய்தால் ( இடும்பை) என்ற  துன்பம் வாழ்க்கையில் இருந்து      விலகும்.
                                      
   குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

MSK  விளக்கம்:- அறியாமை மூடநம்பிக்கை என்ற இருள் மற்றும் தீவினை செயல்கள் ஆகிய இரண்டும் மனிதனிடம் இருந்தால் அது இறைவனை சென்றடைய  அடைய வழி அல்ல. உண்மையான மெய்யன்புடன இறைவனை நினைவு கூர்ந்து தொழுதால் அவர் அருள் கிடைக்கும். 

குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

MSK  விளக்கம்:- அறியாமை மூடநம்பிக்கை என்ற இருள் மற்றும் தீவினை செயல்கள் ஆகிய இரண்டும் மனிதனிடம் இருந்தால் அது இறைவனை சென்றடைய  அடைய வழி அல்ல. உண்மையான மெய்யன்புடன இறைவனை நினைவு கூர்ந்து தொழுதால் அவர் அருள் கிடைக்கும். 


No comments:

Post a Comment