திமந்திரம் பாடல் 3
ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்தோறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றி செய்வேனே...
விளக்கம்:- திருமூலர் திருமந்திரம் என்ற இந்த நூலை எழுதுவதற்கு தன்னை தானே இறைவனிடத்தில் அர்ப்பணித்து அதைப் பற்றி எழுதுகிறார்.
அ).ஒக்கநின் றானை:- இவ்வுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒன்றாக ஒரே ஒருவனாக இருப்பவன் ஈசன்..
உலப்பிலி தேவர்கள்:- உலப்பு என்றால் அழிவு அதாவது இந்த உடலுக்கு அழிவு வராமல் தேவர்களை காத்து இருப்பவனே..
ஆ).நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்தோறும்:-
நக்கன் என்றால் சிவன்
நாள்தோறும் சிவனையே ஈசனை நினைத்து ஏற்றுக்கொள். அதாவது உனது மனதுக்குள்ளே ஈசனை ஏத்திக்கொள் ஏற்றுக்கொண்டு ஈசனை வழிபாடு.
இ)மேற்றிசைக்குள் தென்திசைக்கொரு வேந்தனாம்.
விளக்கம்:- மேற்றிசைக்குள்:- அதாவது மேற்கு கிழக்கு அதற்குப் பிறகு வடக்கு தெற்கு ஆகும்.
இந்த பூமியை வட துருவம் தென் துருவம் என்று மட்டும்தான் பிரித்துள்ளார்கள். அதனால் தான் திருவள்ளுவரும் திருக்குறளில் தென்புலத்தார் என்று குறள் எண் 43 ல் பாடியுள்ளார்.. அப்படி என்றால் இந்த தென் திசைக்கொரு வேந்தனாம் என்று திருமூலர் எழுதியுள்ளார்.
ஈ).நான்கு திசைகள் ஆக பிரித்தாலும் தென்புலம் தெற்கு திசை என்ற ஒன்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். திசைக்கு வேந்தனாம் ஈசன். அதனால் தான் தென்புலத்தார் என்றார் திருவள்ளுவர்.
மேலும் இயற்கையின் நியதிப்படி இயற்கையை படைத்த இறைவன் வடதுருவத்தில் பனி மூடி எல்லா நாட்களும் இருப்பதால் சாதாரண மனிதர்கள் அங்கு வாழ முடியாது வாழக் கூடிய சூழல் இல்லை. ஆனால் தென்புலம் என்று சொல்லப்படும் கன்னியாகுமரி வரை உள்ள இந்த தமிழக நிலப்பரப்பில் அனைத்து சித்தர்களும் வாழ்ந்தனர். அனைத்து கோவில்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டு வழிபட்டு வருகிறார்கள். தென்திசையில் மனிதர்கள் வாழக்கூடிய அனைத்து விதமான வசதிகளும் உள்ளதால் தென்புலத்தில் தான் முதன் முதல் உயிர்கள் தோன்றியிருக்க வேண்டும்.
தற்போது உள்ள கன்னியாகுமரிக்கு கீழே குமரிக்கண்டம் என்ற ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது அதை கடல் அலைகள் ஆழிப்பேரலையால் மூழ்கடித்து விட்டன. அந்த நிலப்பரப்பு தான் தென்திசை ஆகும் என்கிறார். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே அதில் தோன்றிய உயிரினங்களும் மனிதர்களும் இந்த வனவியல் சாஸ்திரத்தை அறிந்து தெரிந்து இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. எனவே இந்த நான்கு திசைகளுக்கும் வேந்தன் ஆகவும் ஈசன் ஆக இருந்துகொண்டு இந்த உலகை ஆட்டி வைக்கிறான் என்று திருமூலர் கூறுகின்றார் எனலாம்.
[
3.பக்க நின்றார் அறியாத பரமனைப்..
இந்த பிரபஞ்சத்தில் எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் ஈசனை உனக்குத் தெரியாது அவன் உன் பக்கத்தில் நின்றிருக்கிறார் அமர்ந்து இருக்கிறார் என்று அறியாத மனிதர்களே பரம் பொருளாகிய பரமனை பிரபஞ்சத்தை படைத்தவனை
4. புக்கு நின்று உன்னியான் போற்றிசெய் வேனே..
புக்கு என்றால் வீடு, புகழிடம், தங்குமிடம், உடம்பு எனப் பொருள்படும். அதாவது இந்த உடம்பு தான் இறைவனுடைய வீடு புகலிடம் தங்குமிடம் ஆகும் என்கிறார்.
ஈசனே உன்னை யான் போற்றித் துதித்து வழிபட்டு இந்த நூலை படைக்கிறேன் என்கிறார்..