Tuesday 11 July 2023

திருமந்திரம் 2

 திமந்திரம் பாடல் 3

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்


 நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்தோறும்


 பக்கநின் றார்அறி யாத பரமனைப்


 புக்குநின்று உன்னியான் போற்றி செய்வேனே...


விளக்கம்:- திருமூலர் திருமந்திரம் என்ற இந்த நூலை எழுதுவதற்கு தன்னை தானே இறைவனிடத்தில் அர்ப்பணித்து அதைப் பற்றி எழுதுகிறார்.


அ).ஒக்கநின் றானை:- இவ்வுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒன்றாக ஒரே ஒருவனாக இருப்பவன் ஈசன்..

உலப்பிலி தேவர்கள்:- உலப்பு என்றால் அழிவு அதாவது இந்த உடலுக்கு அழிவு வராமல்  தேவர்களை காத்து இருப்பவனே..


ஆ).நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்தோறும்:-

நக்கன் என்றால் சிவன்

நாள்தோறும் சிவனையே ஈசனை நினைத்து ஏற்றுக்கொள். அதாவது உனது மனதுக்குள்ளே ஈசனை ஏத்திக்கொள் ஏற்றுக்கொண்டு ஈசனை வழிபாடு.


இ)மேற்றிசைக்குள் தென்திசைக்கொரு வேந்தனாம்.

விளக்கம்:- மேற்றிசைக்குள்:-  அதாவது மேற்கு கிழக்கு அதற்குப் பிறகு வடக்கு தெற்கு ஆகும்.

 இந்த பூமியை வட துருவம் தென் துருவம் என்று மட்டும்தான் பிரித்துள்ளார்கள். அதனால் தான் திருவள்ளுவரும் திருக்குறளில் தென்புலத்தார் என்று குறள் எண் 43 ல் பாடியுள்ளார்.. அப்படி என்றால் இந்த தென் திசைக்கொரு வேந்தனாம் என்று திருமூலர் எழுதியுள்ளார்.


ஈ).நான்கு திசைகள் ஆக பிரித்தாலும் தென்புலம் தெற்கு திசை என்ற ஒன்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.  திசைக்கு வேந்தனாம் ஈசன். அதனால் தான் தென்புலத்தார் என்றார் திருவள்ளுவர்.


மேலும் இயற்கையின் நியதிப்படி இயற்கையை படைத்த இறைவன் வடதுருவத்தில் பனி மூடி எல்லா நாட்களும் இருப்பதால் சாதாரண மனிதர்கள் அங்கு வாழ முடியாது வாழக் கூடிய சூழல் இல்லை. ஆனால் தென்புலம் என்று சொல்லப்படும் கன்னியாகுமரி வரை உள்ள இந்த தமிழக நிலப்பரப்பில் அனைத்து சித்தர்களும் வாழ்ந்தனர். அனைத்து கோவில்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டு வழிபட்டு வருகிறார்கள். தென்திசையில் மனிதர்கள் வாழக்கூடிய அனைத்து விதமான வசதிகளும் உள்ளதால் தென்புலத்தில் தான் முதன் முதல் உயிர்கள் தோன்றியிருக்க வேண்டும்.


 தற்போது உள்ள கன்னியாகுமரிக்கு கீழே குமரிக்கண்டம் என்ற ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது அதை கடல் அலைகள் ஆழிப்பேரலையால் மூழ்கடித்து விட்டன. அந்த நிலப்பரப்பு தான் தென்திசை ஆகும் என்கிறார். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே அதில் தோன்றிய உயிரினங்களும் மனிதர்களும் இந்த வனவியல் சாஸ்திரத்தை அறிந்து தெரிந்து இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. எனவே இந்த நான்கு திசைகளுக்கும் வேந்தன் ஆகவும் ஈசன் ஆக இருந்துகொண்டு இந்த உலகை ஆட்டி வைக்கிறான் என்று திருமூலர் கூறுகின்றார் எனலாம்.



[

3.பக்க நின்றார் அறியாத பரமனைப்..


இந்த பிரபஞ்சத்தில் எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் ஈசனை உனக்குத் தெரியாது அவன் உன் பக்கத்தில் நின்றிருக்கிறார் அமர்ந்து இருக்கிறார் என்று அறியாத மனிதர்களே பரம் பொருளாகிய பரமனை பிரபஞ்சத்தை படைத்தவனை


4. புக்கு நின்று உன்னியான் போற்றிசெய் வேனே..

புக்கு என்றால்  வீடு, புகழிடம், தங்குமிடம், உடம்பு எனப் பொருள்படும். அதாவது இந்த உடம்பு தான் இறைவனுடைய வீடு புகலிடம் தங்குமிடம் ஆகும் என்கிறார்.

ஈசனே உன்னை யான் போற்றித் துதித்து வழிபட்டு இந்த நூலை படைக்கிறேன் என்கிறார்..

Saturday 15 January 2022

Thirukkural Research

 திருக்குறள் ஆய்வு.

 அறத்துப்பால்

அதிகாரம்-- 1. கடவுள்வாழ்த்து. 

குறள் எண் 1.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகலவன் முதற்றே உலகு

பொதுவான விளக்கம்: எழத்துகளெல்லாம் 'அ' எழுத்தை தமக்கு முதலெழுத்தாகக் கொண்டுள்ளன. அதுபோல உலகத்து உயிர்கள் கடவுளைத் தமக்கு முதலாகக் கொண்டுள்ளன. 


முக்காலும் உணர்ந்து, தொலைநோக்கு அறிவு கொண்டு தெய்வ புலவர் திருவள்ளுவர் எழுதிய குறட்பா உலகப்பொதுமறையாக விளங்குகிறதுஎன அனைவரும் அறிந்ததே ஆகும்.

எம்எஸ்கே சாமி விளக்கம்:

உயிர் என்றால் என்ன என்று அனைவரும் அறிந்ததே. ஒரு சீவனுக்கு உயிர் இல்லாவிட்டால் அது உபயோகமற்ற தாகும் அது கண்ணுக்குத் தெரியாத உயிரினமாக இருந்தாலும் அல்லது தாவரங்களாக இருந்தாலும் உயிர் இல்லாவிட்டால் அந்த பொருளுக்கு அல்லது உடலுக்கு உபயோகமற்றதாகிவிடும். அதனால் அந்த முதல் எழுத்தாகிய ""அ"" உயிர் என்றால் மிகையாகாது அதனால்தான் அஆஇஈஉஊஎஏஐஒஓஔ வரை உள்ள எழுத்துக்களை உயிரெழுத்து என்றார்கள்.

இந்தப் பன்னிரண்டு எழுத்துக்கள் இல்லாவிட்டால் உலகத்திலுறள்ள எல்லா எழுத்துக்களும்  இதை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது.


1.அகரம்:- என்பது 

 "அ உ அம்"  என்ற இந்த மூன்று எழுத்துக்கள் ஒன்றாக சேர்ந்ததுதான் அகரம் எனப்படும் முதல் எழுத்து "அ" என்பதாகும்.

இவ்வுலகில் பிறந்த குழந்தை முதன் முதலில் வாய்திறந்து பேசக்கூடிய  வார்த்தை "அம்மா" என்ற சொல்லாகும். இதை அடிப்படையாகவைத்து தற்போதைய காலகட்டத்தில் அனைத்து உலக மக்களும் வழக்குச் சொல்லாக உபயோகித்து வருகிறார்கள். 'மா' என்று ஹிந்தியிலும் மோம், மேம், மேடம் என உலகிலுள்ள எந்த மொழியில் பேசினாலும் அம்மா என்ற சொல் அடிப்படை சொல்லாக இருப்பதால் அதை அகரத்தில் ஆரம்பித்தார்.


2.முதல எழுத்தெல்லாம்:-  ""அ"" என்ற முதல்  எழுத்து மூலம் மனிதன் எழுத்து அறிவு பெற்றான். இவ்வுலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ""அ"" முதல் எழுத்து ஆகும். 


 3.ஆதி :- என்றால் சூரியன். இவ்வுலகில்  சூரிய ஒளி இல்லை என்றால் உலகம் முழுவதும் இருளாக இருக்கும். இயற்கையின் சுழற்சியில் இரவு பகல் உண்டாகிறது. உயிர்கள் வாழ சூரிய ஒளி தேவை. தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை உணவு தயாரிக்க சூரிய சக்தி தேவை.  எனவே ஆதியை, சூரியனை பகவான் என்றார். 


உலகத்திற்கு அ+ஆதி

அ. ஆ என்ற இரண்டாம் உயிர் எழுத்தும் குறித்து விட்டார்.

 சூரியனும்+அ  என்ற முதல் எழுத்து = இந்த இரண்டும் இன்றியமையாத சக்தியாக உலகத்தில் நிலை பெற்றுள்ளது.   மனிதர்களும் மற்ற  பிற அனைத்து  உயிர்களும் இரண்டு கண்களை கொண்டுள்ளது. அதுபோல சூரியசக்தி + அகரம் என்ற எழுத்தும்   இவை இரண்டுமே இரண்டு கண்களைப் போன்றது.  நமது இரண்டு  கண்களும் இல்லை என்றால் இருளாக இருக்கும். அல்லது கண்களை  மூடிபார்த்தால் ஒன்றும் தெரியாது. 

ஆனால்   அறிவு என்ற அகக்கண்களை திறந்து பார்க்க எழுத்தறிவு தேவை. அதைப் படிக்கும் அறிவு மூலம்  ஞானம் கிடைக்கும். பிறகு மனிதர்கள்   எதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார். 

4.முதற்றேஉலகு:- உயிர்கள் வாழ சூரிய ஒளி அவசியம்  தேவை. ஒளி இல்லை என்றால் உயிர்கள் வாழ முடியாது மரம் செடி கொடி முதல் எல்லாம்  அழியும்.  உலகம் முழுவதும் இருளாக இருக்கும்.  எனவே இவை இரண்டும் இவ்வுலகிற்கு அவசியம் தேவை  


மேலும் விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் சோதிட சாஸ்திரம் அனைத்திற்கும் சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களும் காரணமாக  இயங்கு கின்றது. இதனால் மனிதர்களுக்கு அறிவு கண் திறக்கும் பிறகு அவர்கள் அறிவு ஜீவிகளாக முடியும். இதுமனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்து வருகிறது என்றால் மிகையாகாது என்கிறார். 

காலையில் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறையும் வரை மறுநாள் மீண்டும் சூரியன் தோன்றும் வரை உள்ள கால அளவை கணக்கிட்டு ஒரு நாள் என அக்காலத்திலேயே ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள். மனிதர்களுக்கு தனது வாழ்க்கையில் ஒரு நாள் கழிந்து விட்டால் தன்னுடைய வாழ்நாளின் ஆயுளில் ஒருநாள் குறைந்துவிட்டது என்றால் மிகையாகாது என்கிறார்.


★சூரியன் தான் இந்த உலகத்தில்  இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் உயிர் கொடுப்பவர்.


★சூரியனைச் சார்ந்துதான் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் நாமும் இருக்கின்றோம்.


★இந்தப் பிரபஞ்சத்திற்கு அதிபதி அவர் தான்.


★நமக்கெல்லாம் உயிர் கொடுத்தது நமது தந்தை,அதனால்தான் சூரியன் தந்தைக்கு காரகத்துவமான கிரகம்.


★நமக்கு உயிர் கொடுப்பது தந்தை என்பதால் சூரியனை தந்தைகாரகன் என்று குறிப்பிட்டார்கள்.

★நமக்கெல்லாம் மறுபிறவி கொடுப்பவர் சூரியன் தான்.

இதனால்தான் மருத்துவத்திற்கு சூரியன் அதிபதி.

★நமக்கு உயிர் கொடுக்க வேண்டுமா அல்லது கொடுக்கக் கூடாதா என்பதை தீர்மானிப்பவர் சூரியன்தான்.


உட்கருத்து:- *சூரியன் இல்லாமல் உலகம் இல்லை, ”அ" என்ற எழுத்து இல்லாமல் மொழியும் இல்லை*.

Saturday 11 July 2020


குறள் 891:


பெரியாரைப் பிழையாமை

குறள் பால்: பொருட்பால். 
குறள் இயல்: நட்பியல். 
அதிகாரம்:91.
 பெரியாரைப் பிழையாமை.


குறள் 891:

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.


எம்எஸ்கே விளக்கம்:- ஆறறிவு படைத்த மனிதர்கள் அனைவரும் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த அறிவாளிகளாக, ஞானிகளாக உடனே ஆவது இல்லை. அதற்கு பல வருடங்கள் ஆகலாம். அதிலும் ஒரு சிலரே பெரியோர் அல்லது சான்றோர் அல்லது அறிவுடையோர் ஆகிறார்கள் என அறிவோம்.


1.ஆற்றுவார் :- இந்த உலகில்
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு என தனித்தன்மை என்று சொல்லக்கூடிய தனிஆற்றல் தன்னம்பிக்கை வேண்டும்.
என்னால் ஆற்ற/செய்ய முடியும் ,ஆக்க முடியும், புதிய விஷயங்களை செயலாற்ற முடியும் என செயல்பட்டுவரும் மனிதர்களே ஆற்றுவார்கள்/ வல்லவர்கள் எனப்படுபவர்கள்.

2.ஆற்றல் :- என்றால் திறமை வல்லமை என தனித் தன்மையை கொண்ட மக்கள் ஆற்றல் உடையவர்கள் ஆவர்.
இவ்வுலகில் பல கோடிக்கணக்கான மனிதர்கள் பிறந்தார்கள் வாழ்ந்தார்கள் மறைந்தார்கள். ஆனால் யார் ஒருவர் தனது அறிவாற்றலை உலகிற்கு உபயோகப்படும் வன்னம் என்ன செய்து இருந்தார்களோ அவர்களே அறிவாற்றல் உடையவர்கள்.

உதாரணமாக தெய்வப்புலவர், அருணகிரிநாதர்,வள்ளலார் போன்றவர்களைச் சொல்லலாம்.

3.இகழாமை :- பலகோடி மக்களில் ஒரு சில சான்றோர்கள் இல்லாமல்  இவ்வுலகம் இல்லை. எனவே அவர்களைப் பற்றி இழிவாக  பேசுதலும் தூற்றுதலும் செய்யாமலும் அவர்களிடமே பிழையைக் காணாமல்  இருப்பதே அறிவுடைய மக்களின் சிறந்த பண்பாகும்.

4.போற்றுவார்:- அறிவுடைய சான்றோர்களை ஞானிகளை போற்றி அவர்களிடத்தில் உள்ள அறிவையும் வழிமுறைகளையும் எளிதாக பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.  ஒருவன் தானாக ஒவ்வொரு விஷயத்தையும் கற்று கஷ்டப்பட்டு பின்னர் தெளிவு அடைவதை விட அறிவுடைய சான்றோர்களை போற்றி அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை அடைய வேண்டும். 

5.போற்றலுள் எல்லாம் தலை.
ஒருவனைக் பாதுகாத்திட அவனுக்கு  அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும். அதாவது பெரியோர்களின் மனம் நோகாமல் அவர்களைப் பணிந்து போற்றி அவர்கள் சொல்லை பின்பற்றினால் வாழ்க்கையில் ஒரு நல்ல சிறந்த தலையாய நிலையை அடைய முடியும் என்பதே ஆகும்.

உட்கருத்து:- *சான்றோர்களின்/ அனுபவமுற்றவர்களின் பாடமே சிறந்த படிப்பினையாகும்*

Saturday 7 March 2020

அனைவருக்கும்   திருக்குறள் வணக்கம்.



 தினமும் ஒரு குறள் எனற தலைப்பில்  திருக்குறளுக்கு



 இளையதலை முறையினர்கள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஆண்டு 16/1/2018 முதல் எழுதி வருகிறேன்.



இன்று 781வது நாள் ஆகும்.  16/1/2018 தேதியிலிருந்து திருக்குறள் 1 ல் ஆரம்பித்து இன்று 771 வரை குறளுக்கு விளக்கம் எழுதியுள்ளேன்.

திருக்குறள் வணக்கம்.  
மறு ஆய்வு.

 அறத்துப்பால்
அதிகாரம்-- 1. கடவுள்வாழ்த்து. 

குறள் எண் 1.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகலவன் முதற்றே உலகு.

பொதுவான விளக்கம்: எழத்துகளெல்லாம் 'அ' எழுத்தை தமக்கு முதலெழுத்தாகக் கொண்டுள்ளன. அதுபோல உலகத்து உயிர்கள் கடவுளைத் தமக்கு முதலாகக் கொண்டுள்ளன. 

முக்காலும் உணர்ந்து, தொலைநோக்கு அறிவு கொண்டு தெய்வ புலவர் திருவள்ளுவர் எழுதிய குறட்பா உலகப்பொதுமறையாக விளங்குகிறது
என அனைவரும் அறிந்ததே ஆகும்.

எம்எஸ்கே சாமி விளக்கம்:
உயிர் என்றால் என்ன என்று அனைவரும் அறிந்ததே. ஒரு சீவனுக்கு உயிர் இல்லாவிட்டால் அது உபயோகமற்ற தாகும் அது கண்ணுக்குத் தெரியாத உயிரினமாக இருந்தாலும் அல்லது தாவரங்களாக இருந்தாலும் உயிர் இல்லாவிட்டால் அந்த பொருளுக்கு அல்லது உடலுக்கு உபயோகமற்றதாகிவிடும். அதனால் அந்த முதல் எழுத்தாகிய ""அ"" உயிர் என்றால் மிகையாகாது அதனால்தான் அஆஇஈஉஊஎஏஐஒஓஔ வரை உள்ள எழுத்துக்களை உயிரெழுத்து என்றார்கள்.
இந்தப் பன்னிரண்டு எழுத்துக்கள் இல்லாவிட்டால் உலகத்திலுறள்ள எல்லா எழுத்துக்களும்  இதை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டது.

1.அகரம்:- என்பது 
 "அ உ அம்"  என்ற இந்த மூன்று எழுத்துக்கள் ஒன்றாக சேர்ந்ததுதான் அகரம் எனப்படும் முதல் எழுத்து "அ" என்பதாகும்.
இவ்வுலகில் பிறந்த குழந்தை முதன் முதலில் வாய்திறந்து பேசக்கூடிய  வார்த்தை "அம்மா" என்ற சொல்லாகும். இதை அடிப்படையாகவைத்து தற்போதைய காலகட்டத்தில் அனைத்து உலக மக்களும் வழக்குச் சொல்லாக உபயோகித்து வருகிறார்கள். 'மா' என்று ஹிந்தியிலும் மோம், மேம், மேடம் என உலகிலுள்ள எந்த மொழியில் பேசினாலும் அம்மா என்ற சொல் அடிப்படை சொல்லாக இருப்பதால் அதை அகரத்தில் ஆரம்பித்தார்.

2.முதல எழுத்தெல்லாம்:-  ""அ"" என்ற முதல்  எழுத்து மூலம் மனிதன் எழுத்து அறிவு பெற்றான். இவ்வுலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ""அ"" முதல் எழுத்து ஆகும். 

 3.ஆதி :- என்றால் சூரியன். இவ்வுலகில்  சூரிய ஒளி இல்லை என்றால் உலகம் முழுவதும் இருளாக இருக்கும். இயற்கையின் சுழற்சியில் இரவு பகல் உண்டாகிறது. உயிர்கள் வாழ சூரிய ஒளி தேவை. தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை உணவு தயாரிக்க சூரிய சக்தி தேவை.  எனவே ஆதியை, சூரியனை பகவான் என்றார். 

உலகத்திற்கு அ+ஆதி
அ. ஆ என்ற இரண்டாம் உயிர் எழுத்தும் குறித்து விட்டார்.
 சூரியனும்+அ  என்ற முதல் எழுத்து = இந்த இரண்டும் இன்றியமையாத சக்தியாக உலகத்தில் நிலை பெற்றுள்ளது.   மனிதர்களும் மற்ற  பிற அனைத்து  உயிர்களும் இரண்டு கண்களை கொண்டுள்ளது. அதுபோல சூரியசக்தி + அகரம் என்ற எழுத்தும்   இவை இரண்டுமே இரண்டு கண்களைப் போன்றது.  நமது இரண்டு  கண்களும் இல்லை என்றால் இருளாக இருக்கும். அல்லது கண்களை  மூடிபார்த்தால் ஒன்றும் தெரியாது. 
ஆனால்   அறிவு என்ற அகக்கண்களை திறந்து பார்க்க எழுத்தறிவு தேவை. அதைப் படிக்கும் அறிவு மூலம்  ஞானம் கிடைக்கும். பிறகு மனிதர்கள்   எதையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்கிறார். 
4.முதற்றேஉலகு:- உயிர்கள் வாழ சூரிய ஒளி அவசியம்  தேவை. ஒளி இல்லை என்றால் உயிர்கள் வாழ முடியாது மரம் செடி கொடி முதல் எல்லாம்  அழியும்.  உலகம் முழுவதும் இருளாக இருக்கும்.  எனவே இவை இரண்டும் இவ்வுலகிற்கு அவசியம் தேவை  

மேலும் விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் சோதிட சாஸ்திரம் அனைத்திற்கும் சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களும் காரணமாக  இயங்கு கின்றது. இதனால் மனிதர்களுக்கு அறிவு கண் திறக்கும் பிறகு அவர்கள் அறிவு ஜீவிகளாக முடியும். இதுமனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்து வருகிறது என்றால் மிகையாகாது என்கிறார். 
காலையில் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறையும் வரை மறுநாள் மீண்டும் சூரியன் தோன்றும் வரை உள்ள கால அளவை கணக்கிட்டு ஒரு நாள் என அக்காலத்திலேயே ஞானிகள் கணக்கிட்டுள்ளார்கள். மனிதர்களுக்கு தனது வாழ்க்கையில் ஒரு நாள் கழிந்து விட்டால் தன்னுடைய வாழ்நாளின் ஆயுளில் ஒருநாள் குறைந்துவிட்டது என்றால் மிகையாகாது என்கிறார்.

★சூரியன் தான் இந்த உலகத்தில்  இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் உயிர் கொடுப்பவர்.

★சூரியனைச் சார்ந்துதான் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களும் நாமும் இருக்கின்றோம்.

★இந்தப் பிரபஞ்சத்திற்கு அதிபதி அவர் தான்.

★நமக்கெல்லாம் உயிர் கொடுத்தது நமது தந்தை,அதனால்தான் சூரியன் தந்தைக்கு காரகத்துவமான கிரகம்.

★நமக்கு உயிர் கொடுப்பது தந்தை என்பதால் சூரியனை தந்தைகாரகன் என்று குறிப்பிட்டார்கள்.
★நமக்கெல்லாம் மறுபிறவி கொடுப்பவர் சூரியன் தான்.
இதனால்தான் மருத்துவத்திற்கு சூரியன் அதிபதி.
★நமக்கு உயிர் கொடுக்க வேண்டுமா அல்லது கொடுக்கக் கூடாதா என்பதை தீர்மானிப்பவர் சூரியன்தான்.

உட்கருத்து:- *சூரியன் இல்லாமல் உலகம் இல்லை, ”அ" என்ற எழுத்து இல்லாமல் மொழியும் இல்லை*.



நன்றி 





இங்கனம்  எம்எஸ்கே மனோகரன் நாயனார் எம். ஏ. எல்எல்பி.  எஸ்.எஸ்.பி. ஓய்வு.  கோவை.

Tuesday 27 August 2019

Monday 26 August 2019

குறள் 451: ( நாள்) குறள்பால்: பொருட்பால்.  குறள் இயல்:அரசியல்.  அதிகாரம்:46. சிற்றினஞ்சேராமை சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்  சுற்றமாச் சூழ்ந்து விடும். எம் எஸ் கே விளக்கம்:- ஆறறிவு கொண்ட மனிதனுக்கு தான் எந்த இன மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற பகுத்தறிவு வேண்டும். இளம் சிறியவர்கள் பச்சை மரத்தை போல எளிதில் வளையும் தன்மை குணத்தில் இருக்கும். அதனால் தீய எண்ணம் கொண்ட இன மக்களுடன் தவறாக சேர்ந்துவிட்டால் எளிதில் அவர்களுடைய குணம் அதேபோல மாறிவிடும். 1.சிற்றினம் அஞ்சும்:- சிற்றினம் என்றால் குழந்தையாக பிறந்து 18 வயது வரை மனிதனாக மாறும் வரை உள்ள காலத்தை சிற்றினம் அதாவது இளமை காலம் எனலாம். இக்காலத்தில் சிறுவர்களின் இதயமும் எண்ணமும் மிகவும் மிருதுவானது. களிமண் ஈரத்துடன் இருக்கும்போது அழகான சிற்பமாகவும் மாற்றமுடியும் எந்த வடிவம் வேண்டுமானாலும் செய்ய முடியும். அதனால் சிறுவயதில் உள்ளவர்களை மிகவும் கவனமாக கையாண்டு வளர்க்க வேண்டும் அதனால்தான் சிற்றினம் ==தீய ஒழுக்கங்கள் உடைய இன மக்களாகிய சிற்றினம் கண்டு அஞ்ச வேண்டும் என்கிறார். காரணம் என்னவென்றால் 2. பெருமை சிறுமைதான்:- இளைஞர்கள் தனது அறியா பருவத்தில் சிறுமையை பெருமையாக எடுத்துக் கொள்வார்கள். அதாவது தீய பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுடன் சிறுவர்களும் சேர்ந்து பழகும் பொழுது தீய ஒழுக்கங்கள் சிறுவர்களுக்கு சாதகமாக எளிதாக மனதில் பதிந்து கெட்ட பழக்க வழக்கமாக மாறிவிடும். 2.சுற்றமாச் சூழ்ந்து விடும்.:- எனவேதான் அவர்களை வளர்க்கும் சுற்றுச்சூழல் நல்ல விதமாக இருக்க வேண்டும் *இளமையில் கல்* என்றார்கள் அதுபோல இளமைப் பருவத்திலே எல்லாவகையான கலைகளையும் நூல்களையும் கற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். அவன் சிறந்த குடிமகனாகவும் நல்லொழுக்கம் உடையவனாகவும் எதிர்காலத்தில் சான்றோராகவும் மாற முடியும். உட்க்கருத்து:- பெரியோர்கள் ஒழுக்கமற்ற தவறான இயல்புடைய இனத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்கிவிடுவர். ஆனால் சிறியோர் இயல்பு அந்த இனத்தைக் தனக்குச் சுற்றமாக எண்ணுவதால் தவறான பாதையில் செல்ல வாய்ப்பு உள்ளது.

Thursday 7 February 2019

Aram

குறள் 388:  முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு  இறையென்று வைக்கப் படும். எம் எஸ் கே விளக்கம் . இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் யாராக அரசனாகவும் சாதாரண மனிதனாக இருந்தாலும் மனிதாபிமானத்துடன் மக்களைக் காப்பாற்றினால் அவன் தெய்வம் ஆகலாம் என்கிறார். ஆனால் ஒரு மனிதன் தனி மனிதன் நாட்டிலுள்ள எல்லா மக்களையும் காப்பாற்ற இயலாது. ஆதனால் ஒரு மன்னன்/ அரசன் நாட்டை ஆளும் சக்தி எல்லா வகையான தகுதி படைபலம் பொருள்வளம் அரசவை இருப்பதால் மன்னனை இறை என்றார். 1.முறைசெய்து :- அரசன் தனது ஆட்சியில் முறையாக மக்களை பாதுகாத்து நல்லவை செய்யவேண்டியதை எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்து தனது நீதி நேர்மை தவறாது அறநெறியுடன் ஆட்சி செய்யும் அரசனே சிறந்த அரசன். 2.காப்பாற்றும் :- அரசன் தனது குடிமக்களுக்கு துன்பம் ஏற்படும்போதும் பகைவர்கள் நாட்டின் மீது படையெடுக்கும் போது குழந்தைகளையும் பெண்களையும் முதியோர்களையும் முதலில் அரண் அமைத்து காப்பாற்றுவது அதேபோல நாட்டில் பஞ்சம் பசி பிணி என இயற்கை அழிவுகள் வந்தாலும் அப்போதும் நாட்டு மக்களை காப்பாற்றுவது ஒரு அரசனின் தலையாய கடமையாகும். 3.மன்னவன் மக்கட்கு :- இந்த மாதிரி ஒரு மன்னன் தனது மக்களுக்காக மக்களோடு மக்களாக இருந்து ஆட்சி செய்யும் மன்னவனே இவ்வுலகம் மட்டுமில்லாமல் அவனை 4 இறையென்று வைக்கப் படும்.;- இறை என்றால் சிவன் பரமசிவன் பரம்பொருள் எனப்படும் எல்லோரையும் காப்பாற்றுபவன் கடவுள். அன்பு பாசம் நேசம் இரக்கம் கருணை நீதி நேர்மை வழுவாமல் அருளுடன் அறநெறியை கடைபிடிப்பது மேலும் இந்த குணநலன்களை உடைய தன்மையை இறைவன் என நாம் எடுத்துக் கொள்ளலாம். எனவே அந்த நாட்டில் உள்ள மக்களும் அந்த அரசனை இறைவன் என்று போற்றுவார்கள். உட்கருத்து:- இக் குறள் மூலம் அறிவது என்னவென்றால் *மனிதனும் தெய்வமாகலாம்* எந்த ஒரு மனிதன் இன்னொரு மனிதனை காப்பாற்றும் போது அங்கு அவன் தெய்வமாக போற்றப் படுகிறான். நமது பிறப்பு முதல் *தெய்வம் இறைவன் கடவுள்* என்று கோவிலுக்குச் சென்று வழிபடுகிறோம் அப்படியானால் இக்குறளில் மன்னனை அதாவது ஒரு மனிதனை இறை என்று ஏன் கூறுகிறார் என்றால் எந்த மனிதனிடத்தில் மனிதநேயத்துடன் பிறர் துன்பம் அறிந்து உதவி செய்கிறானோ அந்த தன்மையை *தெய்வம்* எனலாம்அதனால்தான் அரசன் மக்களை காப்பாற்றுகிறான் அதனால் தெய்வத்திற்கு உண்டான குணநலன்கள் தன்மை அரசனிடம் இருப்பதால் அவனை இறை என்றார். ஆனால் நாம் அறிவது தெரிந்தது பிறப்பு முதல் நமக்கு அறிவுறுத்தி வந்தது *தெய்வம்* என்றால் கோவிலில் இருக்கும் தெய்வ வடிவில் உள்ள உருவங்கள் தான் நமக்கு தெரியும். ஆனால் இக்குறளில் மனிதனை தெய்வமாக்குகிறார்.